ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக பொங்கல் வைத்து, அபிஷேக ஆராதனை தினமும் நடைபெற்றது
.இதனைத் தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் கலந்து கொண்டன. அதனை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.
இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாயல்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு இப்போட்டியை கண்டு ரசித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings