காஞ்சிபுரம்
திமுக பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம் திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போகிறார் என்கிற புகைச்சலே இதற்கு காரணம்.
இந்தநிலையில் கோட்டூர்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவெடுப்பார் என்றார்.
இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களிலும் வெளியாகலாம் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings