- நீலகிரி மாவட்டம். # இரவு நேரத்தில் மின் தடை கோத்தகிரி அரசு மருத்துவ மனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த செவிலியர்கள், மருத்துவர்கள்.
நீலகிரி மாவட்டம்கோத்தகிரி சுற்று வட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குக்கிராம மக்கள் சிகிச்சைப் பெறுவதற்காக கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் அரசு மருத்துவமனை பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த மருத்துவமனையில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரி இடு கொரை பகுதியை சேர்ந்த துரை, என்பவரின் மகள் 3 வயது சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது 3 முறை விட்டு விட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக டாக்டர்கள் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். டார்ச்லைட் மூலம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.Johndesuza(Daniel)8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings