சென்னை
பள்ளி கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.ரவிச்சந்திரன் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் (மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திருச்சி, திருச்சி மாவட்டம்).
பிஎஸ்.இரமா மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் (மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்).
(மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்)
மேற்காணும் திருத்திய மாறுதல் பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் பார்வையில் காணும் செயல்முறைகளில் அறிவுறுத்தியுள்ளவாறு திறுத்திய மாறுதல் ஆணை பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிலிருந்து பணியில் மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துக்களை இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணிவிடுப்பு, பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்புச் சான்றிதழ் உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்கத்திற்கும், தொடர்புடைய இயக்ககம், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings