கொல்கத்தா
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சரக்கு ரயில் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில்கள் மோதல் எதிர்பார்க்காத விபத்து. அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ரயில்வே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்க மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரயில்கள் மோதலுக்கு சீல்டா ரயில் நிலையத்தில் அரசு உதவி மையத்தை அமைத்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அண்களை அழைக்கலாம். 033-23508794, 033-23833326.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings