in

குன்னூர் அருகே சுற்றுலா வந்த வாகனம் விபத்து: சுற்றுலா பயணிகள் காயம்

நீலகிரி:

நீலகிரி மாவட்டமத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் பிக்கப் வாகனத்தில் சுற்றுலா வந்தபோது பெட்டட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் கயாம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு பிக்கப் வாகனத்தில் 13 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

குன்னூர்-  கட்டப்பட்டு சாலையில் உள்ள பெட்டட்டி பகுதியில் மிகக்குறுகிய வளைவில் முன்னாள் வந்த வாகனத்திற்கு வழிவிடும் போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பின்னோக்கி  30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது இதில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் விவசாய நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சிறு, சிறு மற்றும் பலத்த காயமடைந்தனர்.

உடனே காயம் அடைந்த அனைவரும் குன்னூர் லாலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்,மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

5ம் கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி