சென்னை
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கொடி ஏற்றுகிறார்.
விழாவை முன்னிட்டு காலை 8.45 மணிக்கு முதல்வர் கோட்டைக்கு வருகிறார். அவருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைப்பார்.
முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு மூவர்ண தேசிய கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதும் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
மேலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings