சென்னை
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடை நாள். எனவே இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
இதேபோன்று முழுநேர விடுதி காப்பாளர், தணிக்கை ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இதற்கான காலிப் பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அறிக்கை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2ல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏல் 1,820 பணியிடங்களுக்கம் முதல்நிலைத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கடைசிநாளாகும். இன்றுஇரவு 11.59 மணிக்குள் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விவரங்களை ஜூலை 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருத்த வாய்ப்புகள் அளிக்கப்படும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings