in

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்குத் தடை நீடிப்பு!

மதுரை:

திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகம் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரில், நிறுத்தி வைத்து ஒன்றிய உணவு பாதுகாப்பு ஆணைய அலுவலர் பிப். 14-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன நிர்வாகி ராஜதர்ஷினி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நெய் விநியோகத்தில் தான் பிரச்சினை. எங்கள் நிறுவனம் பால்கோவா, வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இப்பொருட்களில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, நெய் தவிர்த்து பிறகு பொருட்கள் வர்த்தகத்துக்கான உரிமத்தை நிறுத்தி வைத்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், ‘‘ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது.அதே நேரத்தில் பால் பதப்படுத்துதல், விற்பனை செய்வதைத் தொடரலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு !

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 3 பேரின் குடும்பத்துக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு