சென்னை
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் எம்பி., தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 2ம் தேதி விசிக மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது.
ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும். மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும்.
கள்ளுக்கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் தமிழகத்தில் இருக்க கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம். இந்த நிலைப்பாட்டை தேர்தல், அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. மக்கள் பிரச்சனைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இணைவோம் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings