தென்காசி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராசாமிபுரம் பகுதியை சேர்ந்த சுடலையாண்டி மகன் சுரேஷ் (வயது 27). குடிக்கு அடிமையான இவர் வருவோர் போவோரிடம் குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுப்பதையும், மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி சங்கரன்கோயில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
அடிக்கடி இவர் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்துகொள்வதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சங்கரன்கோவில் காவல்நிலைய ஆய்வாளர் மனோகரன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி இவர் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சையர் கமல் கிஷோர், சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து சுரேஷ், குண்டல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings