in

திருடச் சென்ற வீட்டில் வயிறார சாப்பிட்ட திருடர்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் பங்கேற்னர்.

ஊரில் உள்ள மக்கள் இந்த விழாவில் தீவிரம் காட்டியதால் இதனை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் தேன்கனிக்கோட்டை டாலர் காலனியில் உள்ள பேட்டரி கடை உரிமையாளர் நவாஸ்கான் (வயது 42) என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 11 சவரன் தங்க நகை, 1.25 லட்சம் ரொக்கம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்றனர்.

பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள ஹனி வேலி என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வெங்கடேஷ் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து 2 சவரன் தங்க நகை, ரூ.2.25 லட்சம் ரொக்கப்பணம், 600 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.

அங்கிருந்து அருகில் உள்ள தனியார் நிறுவன சூப்பர்வைசர் கார்த்திக் (46) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 1 சவரன் நகையை திருடிச் சென்றனர்.

கொள்ளை கொள்ளையாக நகை, பணங்களை வாரியும் அடங்காத திருட்டு கும்பல் அடுத்ததாக டிரைவர் ரவி என்பவர் வீட்டிற்கு சென்றனர். உள்ளே பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் வீடு வீடாக சென்று திருடி கலைத்து போனதால் ரவி வீட்டில் இருந்த உணவை எடுத்து வயிறார சாப்பிட்டுவிட்டு சென்றுளளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போலீசாரிடம் பேரம் பேசிய கஞ்சா வியாபாரி… என்ன செய்தது போலீஸ்

ஆள் மாறாட்டம் மூலம் ரூ.65 லட்சம் மோசடி செய்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ்