வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் பாரிச்சாமி (45). இவரது மனைவி பரிமளா(40). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
பரிமளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த அவரது கணவர் பாரிச்சாமி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை விடவில்லை. கணவர் அடிக்கடி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று கூலிப்படையினர் பாரிச்சாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தநிலையில், பாரிச்சாமியின் மனைவிவை தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து எதுவும் தெரியாதது போல் நடித்த மனைவியை உண்மைகளை உலறிய நிலையில் அவரையும், கள்ளக்காதலன் குமாரையும் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings