in

முடிவுக்கு வந்தது தங்கலான் படப்பிரச்சனை

சென்னை

அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஏராளமானோர் பணம் கொடுத்து வைத்திருந்தனர். அதனை பலருக்கு இவர் கடனாக கொடுத்து அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். அவர் மறைவுக்கு பிறகு அவருடைய சொத்துக்களை சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

இந்தநிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அர்ஜுன்லாலிடம் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும் அதனை அவர் திரும்ப செலுத்தவில்லை என்றும் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதேபோல் கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

இதையடுத்து இன்று ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தப்பட்டதாக இன்று நடந்த விசாரணையின்போது ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கலான் படம் வெளியாக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இந்த வழக்கை வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் படம் தங்கலான். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை எடுக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் ஞானவேல் ராஜா பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பேருந்து கட்டணம் உயர்கிறதா? இதோ விளக்கம்

குற்றவாளிகள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை கண்டுகொள்வதில்லை: அண்ணாமலை