சென்னை
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆனால் கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் 24ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டம் வருகிற 20ம் தேதி நடக்கும் என்று சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு சபை கூடும் நிலையில் காலை 9.30 மணிக்கே கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings