மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் குய்கி – மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் வெடிளத்துள்ளது. இந்த மோதலில் ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் கையில் எப்படி ஆயுதங்கள் வந்தன என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அனைத்து மணிப்பூர் மாணவர் யூனியன் போராட்டத்தை கையில் எடுத்தது.
இதனை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். இந்திய ராணுவ படைகள் மணிப்பூருக்கு விரைந்தனர். கான்வாய் வாகனத்தில் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த ராணுவ படையை மாணவர்கள் கற்கள், கட்டைகளை வீசி கான்வாயை தாக்கினர்.
இதனால் சி.ஆர்.பி.எப். கான்வாய் பின்வாங்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings