நெல்லை:
நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. கூலித்தொழிலாளி. இவருடைய சொத்துக்களை உடன்பிறந்தவர்கள் தரவில்லை என்று கூறி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்தார்.
அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வேதனை அடைந்த சங்கரசுப்பு கடந்த 13ம்தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடிவந்தது அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். உடலில் 90 சதவீதம் காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings