சென்னை:
சென்னையில் போலீஸ் வடக்கு
மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் மர்மநபர் கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் (தண்டையார்பேட்டை) நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் 3 போலீஸ் வாகனங்களைக் கல் வீசி தாக்கி கண்ணாடிகளை நொறுக்கியுள்ளார்.
இது குறித்து போலீசார், சி.சி.டி.வி., காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர், சிதம்பர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் வாகனங்களைத் தாக்கிய போது போதையிலிருந்தாரா? மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings