in

பெரியப்பாவைக் கொன்று துண்டாக வெட்டி குளத்தில் வீசியவர் கைது: அவினாசியில் பரபரப்பு

அவினாசி:

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே கருவலூர் அனந்தகிரி, காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). பனியன் நிறுவன மேலாளர். கோவிந்தசாமிக்கும், அவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி முதல் கோவிந்தசாமி மாயமானார். எங்குத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவினாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இதே பகுதியில் உள்ள தொரவலூர் குளத்தில் மிதந்த அட்டைப் பெட்டியைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.அதில், ஆண் ஒருவரின் நடுஉடல் பாகம் வெட்டிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அது கோவிந்தசாமியின் உடல் என்பது உறுதியானது. சம்பவத்தன்று கோவிந்தசாமிக்கும், அவரது தம்பி மகன் ரமேசுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் கோவிந்தசாமியை, ரமேஷ் அடித்துக்கொன்றுள்ளார். பின்னர், அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரமேஷை கைது செய்தனர். தொடர்ந்து மற்ற உடல் பாகங்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நாகை- இலங்கைக்கு இடையே மீண்டும் தொடங்கியது கப்பல் சேவை

மீண்டும் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய அஜித்!