சென்னை
தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா பிறப்பித்திருந்த அதிரடி உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் கஞ்சாவோ, போதை மாத்திரைகளோ, போதை ஊசிகளோ நடமாட்டம் இருப்பதையும், கடத்திச் செல்வதையும் அடியோடு தடை செய்யப்பட வேண்டும். அப்படி மீறி நடந்தால் என்னுடைய நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த உத்தரவை அடுத்து தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக்ஷித், சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு ஆகியோரது நேரடி மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய 1வது நடைமேடையில் அடீயாவில் இருந்து எஸ்வந்தபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்து நின்றது. வண்டியின் பின்னாடி மூன்றாவது பொது ஜன பெட்டியில் இருந்து இறங்கிய நபர் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தார்.
அவரை நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமை காவலர் பாபு மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர் அவரை மடக்கிக்பிடித்து விசாரணை நடத்தினர். இந்தி மொழியில் பேசிய சந்தேகப்படும்படியான நபர் ஹேமராஜ் நீயால் பே என்பவரது மகன் ஹீராலால் நியால் (வயது 28) என்பதும் ஒடிசா மாநிலம் கல்ஹாண்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவனிடம் கஞ்சா இருந்ததும் இதனை அருந்தினால் வானத்தில் பறக்கும் உற்சாகம் பிறக்கும் எனவும் கூறியுள்ளான். அவனிடத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இந்த கஞ்சாவை ஒடிசாவில் ஜூனே கர்ட் என்ற இடத்தில் ஒரு கிலோ கஞ்சா 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கோயம்புத்தூரில் ஒரு கிலோவிற்கு 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம் என்ற ஆசையில் வந்த அவன் தமிழக ரயில்வே போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டேன்.
அவன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறிய அவன், பாதி லாபத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியுள்ளான். இதனைதொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings