சேலம்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி கிராமத்தில் ஆண் மயில் ஒன்று பெரியசாமி தாண்டவன் வளவு என்பவரின் மகன் மோகன்ராஜிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டது .
இதுகுறித்து நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மயிலை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
துரிதமாக செயல்பட்டு மயிலை காப்பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings