in

ஓணான் இறந்துகிடந்த மதுவை குடித்த மதுப்பிரியர்… என்ன ஆச்சு…?

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ்ஆதனூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். தொழிலாளியான இவர் மதுப்பழக்கம் உடையவர். இவர் திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதுவை வாங்கி குடித்தார். பாதி குடித்த நிலையில் மீதமுள்ள மதுவையும் குடிக்க முயன்றுள்ளார்.

அந்த மதுவில் ஓணான் ஒன்று செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அந்த தொழிலாளி மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்க அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேருக்கு இன்று குற்றப்பத்திரிகை நகல்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்