in

மத்திய அரசு தடை விதித்துள்ள ராட்வீலர் நாய்கள் வளர்ப்பதா?

சென்னை:

வளர்ப்பு பிராணிகளுக்கு லைசன்ஸ் கட்டாயம் என்று சென்னையில் சிறுமியை 2 நாய்கள் கடித்த விவகாரத்தை அடுத்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த வயது சிறுமியை இரண்டு நாய்கள் கடித்தன. இதில் அந்த சிறுமி பலத்த காயம்அடைந்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாய்களின் உரிமயாளர் புகழேந்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 5 வயது சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் ஏற்கனவே அதன் உரிமையாளர் கைதான நிலையில் அவரது மனைவி, மகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில் ராட்வீலர்வகையும் ஒன்று. ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்கிற தடையும் உண்டு. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்குஅனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத்துறையும் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

+2 பொதுத் தேர்வு மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மதுபான கொள்கை முறைகேடு: சந்திரசேகரராவ் மகள் ஜாமீன் மறுப்பு