சென்னை:
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 தமிழர்கள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கன் 31 பேர். இவர்களின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள்,கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் தமிழக ஆன்புலன்ஸ்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings