சென்னை
கோவையில் 1988 ஆம் ஆண்டு பயிற்சி பெற்று சென்னையில் பணிபுரிந்த காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணையும் 4வது சங்கம பெருவிழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு வி. பிரபாகரன் தலைமை தாங்கினார். வி.மோகன் தாஸ் வரவேற்புரை ஆற்றினார். இதில் காவல்துறையிலிருந்து ஓய்வு பெறும் எஸ்.ஏ.ரவி, ஆர். ஸ்டெல்லா மற்றும் எஸ்.ரவிக்குமார், வசந்தி ரவிக்குமர் தம்பதியினருக்கு டி.எஸ்.பி. மதியழகன், எஸ்.ஐ. பிரபாகரன் ஆகியோர் பொன்னாடை போற்றி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு மற்றும் அனைத்து காவலர்களின் குடும்பத்தினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் மற்றும் இந்நிகழ்ச்சுக்கு வருகை தந்த அனைவருக்கும் என்.மணிமாறன் நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings