in

விஜய் எழுதிய கடிதத்தை பேனராக வைத்த தவெகவினர்… பின்னர் என்ன நடந்தது?

திருவாரூர்:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து  வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவிகளுக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தார்.

விஜய் எழுதிய இந்த கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக தவெவினரால் பகிரப்பட்டது. அதேபோல, சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரமாக தவெகவினர் வழங்கினர்.

அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெகவினரை போலீசார் கைது செய்து சில மணி நேரத்தில் விடுவித்தனர்.. இதற்கிடையே விஜய் எழுதிய கடித நகலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் மன்னார்குடி நகர ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேருந்து நிலையம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிளக்ஸ் பேனர்களாக அச்சிட்டு வைத்திருந்தனர்.

இதனை அறிந்த மன்னார்குடி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி அகற்றக் கூறினர். தவெகவினரை அழைத்தே அந்த பிளெக்ஸ் பேனர்களை அவிழ்க்க வைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

12 ராசி யேர்களுக்கு 2025ம் ஆண்டு எப்படி இருக்கும்…? (பாகம் 2)

திமுக அரசை கண்டித்து நீதிப்பேரணி; அண்ணாமலை அறிவிப்பு