in

தாணுமாலய சுவாமி கோயில் தெப்ப திருவிழா: தண்ணீர் திறக்க ஏற்பாடு

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வருகிற 16ஆம் தேதி தேரோட்டமும், 17ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.  குமரி மாவட்டம், மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெரும் கடவுள்களும் சேர்ந்துள்ள இந்த தல மூர்த்தி தாணுமாலயன் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் சித்திரை தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா என வருடம் முழுவதும் திருவிழா கலைகட்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நேற்று மே 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நடைபெறும் பத்து நாட்களிலும் காலையில் சாமி வாகன பவனி, இரவு வாகன வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழாவில் ஒன்பதாவது நாளான எதிர்வரும் வரும் 16ஆம் தேதி தேரோட்டம் நடைபெருகிறது. நிறைவு விழாவான பத்தாவது நாள் இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள், எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அன்று இரவே ஆராட்டு நிகழ்ச்சியோடு சித்திரை தெப்பத் திருவிழா நிறைவுபெறுகிறது.

தெப்பத் திருவிழா கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நடக்கும். தற்போது கோடை காலம் என்பதாலும், கோடை மழை பொய்த்ததாலும், தெப்பத்தில் தண்ணீர் 2 முதல் 5 அடி குறைந்துள்ளது. இதனால் தெப்பத்தில், சுவாமி எழுந்தருளி சென்று வர சிரமம் இருக்கும். இதனால் தண்ணீர் தேவைக்காக பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும், அவ்வாறு செய்தால் பழையாறு வழியாக தெப்பத்திற்கு தண்ணீர் வரும் என பக்தர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் ஆகியோர் சென்னையில் உள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பசுமை வழி சாலையில் அமைந்துள்ள குடியிருப்பில் சந்தித்து, தெப்பத்திற்கு வேண்டிய தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தமிழக முதலமைச்சர் மு.க., ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவின் பேரில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராகுல்காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

காரியத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி