தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள ஒரு பேக்கரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தாம்பரம் அடுத்த சேலையூர் அரசு பள்ளி எதிரே பேக்கரி மற்றும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேக்கரியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ பேக்கரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
காற்றின் மூலம் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் அனைத்து கடைகளும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து காரணமாக வேளச்சேரி, கிழக்கு தாம்பரம், மேடவாக்கம் பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings