சென்னை:
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறாக பிரசாரம் செய்து வருகிறார். மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துக்களை பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருள்ளார்.
ஆனால், மனுவில் குறைகள் உள்ளதாகவும், அதனை சீர் செய்து தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings