in

இப்படி ஒரு தாரகை அனைத்து தொகுதிகளிலும் வேண்டும்

தலையங்கம்

                                                                                                                                              ==== சிவா பரமேஸ்வரன்

முதலில் முனைவர் தாரகை கத்பர்ட்க்கு பாராட் டுக்கள். முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வாகி 100 நாட்கள் அளவில் தான் ஆகின்றன. ஆனால், அவர் தொகுதியின் நலன் அல்லது விழிப்புணர்வு மெச்சத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத் தில் நெடுஞ்சாலைப் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் வரவிருந்த நிலையில், மோசமாக இருந்த சாலைகளை, “பேட்ச் ஒர்க்” செய்கின்ற பொதுவான நடவடிக்கையை அவர் தடுத்து நிறுத்தியுள்ளார். தைரியமாக ”அமைச்சர் வந்து பார்த்த பிற்கு, சீரமைப்பைச் செய்தால் போதும்” என்று துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.

இந்த துணிவு அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தால் எப்படியிருக்கும். அது ஒன்றும் இயலாத காரியம் இல்லை. மக்கள் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது, அது முறையாக செய்யப்படுகிறதா, பொறுப்புக்கூறல் உள்ளதா என்ற அடிப்படை விஷயங்களையே தாரகை கவனத்தில் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் நானறிந்த வகையில், அண்மைக் காலத்தில் இப்படி துணிச்சலாக எந்த சட்டமன்ற உறுப்பினரும் இப்படி வீதியில் இறங்கி, அதிகாரிகளையோ அல்லது ஒப்பந்ததாரர்களையோ எதிர்கொண்டு, ”பேட்ச் ஒர்க்” வேலையை தில்லாக நிறுத்தியதில்லை.

ஆனால், இப்படி ஏன் மற்றவர்கள் செய்வதில்லை என்பது தான் கேள்வி?

அரச வேலைத்திட்டங்களில் ’தில்லாலங்கிடி வேலைகள்’ என்பது ஒரு துறையில் மட்டுமில்லை. அது எந்த அரசாக இருந்தாலும், எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், யார் அமைச்சராக இருந்தாலும், அது ஒரு தொடர்கதை. 

அதுவும் முடிவில்லாத தொடர்கதை. முக்கிய காரணம் என்று கூறப்படுவது ஆட்சிக்கு அப்பால் ஒரு வலைப்பின்னல் அல்லது சங்கிலித் தொடர் இருப்பதேயாகும். அதை முறிக்க அல்லது முறியடிக்க யாராவது முயன்றால் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ளது.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரை இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். ஒவ்வொரும் தமது பகுதிகளில் நடைபெறும் அரசுப் பணிகளை, அது நடைபெறும் போது ஒரு கூட்டமாகச் சென்று கானொளியாகப் பதிவு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளூர் சமூக அரசியல் செயல்பாட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அது ஒரு வகையில் ஆவணப்படுத்துதலும் ஆகும்.

சமூக ஊடகங்கள் கோலோச்சும் இக்காலப்பகுதியில், ஒவ்வொரு இளைஞரும் தம்மிடமுள்ள ஸ்மார்ட் ஃபோனை சமூக நலனுக்காக திறன்பட பயன்படுத்த முடியும். ஊழல்வாதிகள் உலகெங்கும் உள்ளார்கள் என்றாலும், ஆங்காங்கே நேர்மையானவர்களும் இருக்கிறார்கள்.

தாரகை கட்பர்ட் செய்தது போன்று இளைஞர்கள், நெடுஞ்சாலைப் பணிகள், பொதுப்பணிப்துறையின் மராமத்து பணிகள், மின்வாரியத்தின் செயல்பாடுகள், சாலைகளில் சுற்றித்திரியும் யமன்களான மாடுகள், நாய்கள் என்று எந்த விஷயமாக இருந்தாலும் அதை பதிவு செய்து உடனுக்கும் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் போது அது உரியவர்களை சென்று சேர்கிறது. பல சந்தர்ப்பங்களில் உடனடியாக நடவடிக் கையும் எடுக்கப்படுகிறது. அப்படியான கானொளிகள் முதல்வர் அலுவலத்திற்கும் இணைக்கப்படும் போது, அது விரைவாக நடவடிக்கை எடுக்க வழி செய்கிறது.

மேலை நாடுகளில் இப்படியான செயல்பாட்டை ‘சிட்டிசன்ஸ் ஜர்னலிசம்’ அதாவது மக்களே ஊடகவியலாளர்களாக மாறி, செய்திகளை ஆதாரத்துடன் பதிவு செய்வது மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. தமிழக இளைஞர்கள் எந்த வகையிலும் மற்ற மாநிலங்கள், இதர நாடுகளிலுள்ள இளைஞர்களுக்கு குறைவானவர்கள் அல்ல..

ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயமும் உள்ளது. அந்த இளம் பெண் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. அதனால், அவரால் தவறை துணிச்சலாக தட்டிக்கேட்க முடிந்தது. அரச இயந்திரம் தொடர்ச்சியாக எந்தளவிற்கு புரையோடிப் போயுள்ளது என்பதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.

தொகுதிக்கு ஒரு தாரகை வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் பள்ளியில் தேசிய ஆசிரியர் தினம்

பள்ளியில் பேச்சாளர் பேசிய விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்