in

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர்… பதற்றமும்… கைதும்…

நெல்லை

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் பள்ளிக்கு அரிவாளுடன் வந்துள்ளார். இதனால் பீதியடைந்த மாணவர்கள் தலைதெறிக்க ஓடி ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். இரு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவர், சக மாணவர், அருவாள் எடுத்துவர உதவிய மாணவர் என 3 பேர் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பல ஆண்களை மணந்து ஏமாற்றிய கல்யாண ராணிக்கு ஜாமீன்

முதல்வருக்கு விருப்பமில்லை என்றால் விரைவாக மூடுவிழா நடத்தலாமே