சென்னை:
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் தமிழக மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவிலான “சிங்கிள் ஸ்டிக்” சிலம்ப போட்டி கேரள மாநிலம் கொச்சின் எர்ணாகுளம் ராமவர்ம கிளப்பில் நடைபெற்றது. 5 முதல் 10 வயது வரை ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 15 வயது வரை ஒரு பிரிவாகவும் ஒரே கட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து தமிழண்டா சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் பயிற்சியாளர்கள் ஆனந்த், செல்வம், எஸ்.சரளா ஆகியோர் தலைமையில் 62 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் 50 பேர் தங்கப்பதக்கமும், 12 பேர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றிக் கோப்பையுடன் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings