in

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி… 6 நாட்களுக்கு மழை

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கையில், இன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (30ம் தேதி) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 30 முதல் 40 கி.மீ வரை வலுவான தரைக்காற்று வீசக்கூடும். ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.2ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திமுக நிர்வாகியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது

கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் வசூலிப்பதாக பெண் புகார்