in

மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தமிழில் புதுப்பிப்பு

சென்னை, 

தமிழகத்தில், 36 மாவட்ட ஊராட்சிகள்,  388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் என மொத்தம் 12,949 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில், 1.19 லட்சம் பதவிகள் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது.

இதைத் தொடர்ந்து, 2021 செப்டம்பரில் எஞ்சிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இதற்காக, ஆணையத்தின் இணையதளம் முழுமையாக தமிழில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், முன்பு பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன. இதனால், தேர்தல் குறித்த பல விபரங்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

மாநில தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோதி நிர்மலா சாமி உத்தரவின்படி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், முழுமையாக தமிழுக்கு இணையதளம் மாற்றப்பட்டு உள்ளது.

இணையதள முகப்பு பக்கத்தில், ‘உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, அமைதியாக நடத்துவோம்; மக்களாட்சிக்கு பெருமை சேர்ப்போம்; வாருங்கள் வாக்களிப்போம்’ என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அரசு போக்குவரத்து துறை, காவல்துறை மோதல்: உள்துறை செயலாளர் ஆலோசனை

கரூரில் அகில இந்திய பூட்டை கூடைப்பந்து போட்டி விறுவிறுப்பு…