தலையங்கம்
சிவா பரமேஸ்வரன்
இறை நம்பிக்கை உள்ளவர்கள் திருப்பதிக்கு சென்று அங்கு பெருமாளை தரிசிப்பதில் காட்டும் ஈடுபாடும், ஆர்வமும் அங்கு ‘பிரசாதம்’ என்று அளிக்கப்படும் லட்டை பெற்று வருவதிலும் செலுத்துவது வழக்கம்.
தமக்கு மட்டுமின்றி உற்றார் உறவினர், அண்டை அயலார் என அனைவரிடமும் அந்த லட்டைப் பகிர்ந்து கொள்வது காலங்காலமாக இருக்கும் ஒரு நடைமுறை. திருப்பது பெருமாள் மீது இருக்கும் அதே பக்தி அந்த லட்டுக்கும் உண்டு.
இன்று திருப்பது லட்டு நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படு நெய்யில் கலப்படம் என்று ‘ஆதாரத்துடன்’ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு தகவலை வெளியிட இந்த செய்தி தேசிய எல்லைகளை தாண்டி பன்னாட்டளவில் பரவிவிட்டது.
சந்திரபாபு நாயிடு அதை ஒரு குற்றச்சாட்டாக மட்டுமே வைக்காமல், பரிசோதனை கூடம் ஒன்றின் அறிக்கையுடன் தகவலை வெளியிட்டுள்ளது, அந்த செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. அதிலுள்ள அரசியலுக்குள் செல்வது நமது நோக்கமல்ல.
அடிப்படையில் இது நம்பிக்கை சார்ந்த விஷயம். நாத்திகவாதம் மற்றும் பகுத்தறிவு பேசுகிறவர்களும் திருப்பதி லட்டை விரும்பி சுவைத்துள்ளதை நான் ஏராளமான முறை கண்டுள்ளேன். அந்த நம்பிக்கை சிதைக்கப்படும் போது, சீற்றம் அதிகரிப்பது நியாயமே. பிரச்சனை இப்போது தான் வெளியே வந்துள்ளது. இனி அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
தமிழகத்திலும் பல ஆலயங்களில் ‘பிரசாதங்கள் விற்கப்படுகின்றன’. இதில் மிக முக்கிய தலமாக இருப்பது பழனி. திருப்பது லட்டுக்கு நிகரான பிரபலமும் ஆதரவும் பெற்றது ’பழனி பஞ்சாமிருந்தம்’. பழனி மலைக்கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் விற்க்கபடும் பஞ்சாமிருதம் உண்மையில் இறைவனுக்கு படைக்கபட்டதா என்பது அந்த பழனியாண்டிக்கே வெளிச்சம். ஆனால் அது அவ்வாறு செய்யப்பட்ட விற்பனைக்கு வருகிறது என்று நம்பிக்கை தொடருகிறது.
தமிழகத்தில் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான ஆலயங்களில் ‘பிரசாதம்’ விற்பதற்கென்றே கடைகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருத்தனி முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், காஞ்சி காமாட்சி கோவில் என்று அனைத்திலும் இப்படி அது விற்கப்படுகிறது.
இது தொடர்பில், இதுவரை யாரும் கேட்காத கேள்வியை கேட்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. திருப்பது லட்டு விஷயத்திலேயே பிரச்சனை எழுந்துள்ளது என்றால், அத்துடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவான அளவே விற்பனைக்கு வரும் தமிழக கோவில்களில் விற்கப்படும் ‘பிரசாதம்’ எந்தளவிற்கு தரமானது, அடிப்படையில் அதற்கென்று ஏதாவது தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, அதை யார் தயாரிக்கிறார்கள், மூலப் பொருட்கள் என்ன, அதன் விற்பனை விலையை யார் நிர்ணயிப்பது என்று பல கேள்விகள் இதில் உள்ளன.
சந்தேகக் கண்ணுடன் இந்த விஷயத்தை நாம் அணுகவும் இல்லை. பொதுவெளியில் ஒரு பிரச்சனை எழுந்துள்ள நிலையில், அது தொடர்பிலான விஷயங்களை கவனத்தில் எடுப்பதே நோக்கம்.
நானறிந்த வகையில், பழனி உட்பட தமிழக ’கோவில்களில் தயாரிக்கப்பட்டு விற்க்கப்படு பிரசாதம்’ குறித்து எந்த தகவலு பொதுவெளியில் இல்லை. அதற்கு ஒரு காரணம் அங்கு தயாரிக்கப்பட்டு விற்கப்படும் அளவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த ‘பிரசாத’ தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இந்து அறநிலையத்துறைன் மூலம் ஏதாவது வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா என்றும் எமக்கு தெரியாது. அப்படி இருந்தால், அது பக்தர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் ஏன் இல்லை என்பதை விளக்கி, இனியாவது அதை கொண்டுவர வேண்டும்.
இறை நம்பிக்கை என்பது மிகவும் உணர்வுபூர்வமானது. அது தொடப்படும் போது அதன் தாக்கங்கள் பெரிதாகவே இருக்கும். தனி மனிதரின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை அது.
தமிழக அரசின் அறநிலையத்துறை என்ன செய்யப் போகிறது?
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings