புதுடெல்லி:
உத்தரகண்ட்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள உயரமான மனா கிராமத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்பட்ட பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
5 பேரைத் தேடும் பணியில் இந்திய ராணுவ விமானப் படையின் 3 ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள், ஒரு சிவில் காப்டர் உட்பட ஆறு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, லெப்டினன்ட் ஜெனரல் டி ஜி மிஸ்ரா ஆகியோர் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க பனிச்சரிவு ஏற்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings