in

பெண் எஸ்.ஐயை ஆபாசமாக பேசிய சிவகங்கை நகர பாஜக தலைவர் கைது

சிவகங்கை:

சிவகங்கையில் சாலை விதிகளை மீறியதை தட்டிக்கேட்ட பெண் எஸ்.ஐ.யை சிவகங்கை நகர பாஜக தலைவர் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை நகர பாஜக தலைவராக இருப்பவர் உதயா. இவர் சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கோட்டை முனியாண்டி கோவில் அருகே வாகன சோதனையின் போது இவரது காரை நிறுத்தி பெண் உதவி ஆய்வாளர் அழகுராணி சோதனை செய்தார். அப்போது ஏன் சீட்பெல்ட் அணியவில்லை என்று உதயாவிடம் பெண் எஸ்ஐ கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உதயா, பெண் எஸ்.ஐயை ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இதையடுத்து வீடியோ ஆதாரத்துடன் பா ஜக நகர தலைவர் உதயா மீது சிவகங்கை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் உதயா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஷசாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு

டி20 உலகக்கோப்பை: அரையிறுத்தியில் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா