ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.,25) மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நாளில் மாற்றுத்திறனாளிகளை சராசரி மனிதனைப் போல சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசு அலுவலகங்களில் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படையான மற்றும் அன்றாட தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சைகை மொழி பற்றி அறிந்து கொள்வதற்கும் இவ்விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், காதுகேளாதோர் சங்கம் கூட்டமைப்பு பரமக்குடி அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings