சென்னை
சின்ஸியர் ஈவென்ட்ஸ் & சிக்கந்தர் பதிப்பகம் சார்பில் நூலின் ஆசிரியரும், உள்ளாட்சி முரசு நாளிதழின் பொறுப்பாசிரியருமான சிக்கந்தர் ஷாவின் ‘நுகர்வாய் நகர்வாய்’ என்கிற புத்தக வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனால் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற உள்ளாட்சி முரசு நாளிதழின் ஆசிரியர் ரிச்சர்டு ஆனந்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஹாஜி ருமைசுதீன் பைஜி, இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலைய எம்.கே.இ.உமர்அப்துல் காதர், அறம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.பி.முகம்மது நாசர், அய்யா சொல்வேந்தன், வங்கி மேலாளர் சி.சித்ரா, அல்லி பாத்திமா மற்றும் உள்ளாட்சி முரசு நாளிதழின் வெளியிட்டாளர் ஜாய்ஸ் ஆனந்த உள்பட பலர் பங்கேற்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings