in

கைதியின் மகளுக்கு பாலியல் தொல்லை: உதவி சிறை காவலருக்கு சிறை

மதுரை:

மதுரை மத்திய சிறையில் உதவி சிறைக்காவலராக பாலகுருசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சிறை கைதி ஒருவரின் மகளுக்கு காவல்துறை தேர்வில் உதவி செய்வதாக கூறி தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.

இதன்மூலம் அவருடன் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், கைதியின் மகள் மற்றும் பேத்திக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து பாலகுருசாமியை ஆரப்பாளையம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு வரவழைத்து கைதியின் மகள் உறவினர்களுடன் இணைந்து காவலரை  கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் பாலகுருசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், மதுரை மாநகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாலகுருசாமியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழ்நாட்டை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை

மருத்துவ காலி பணியிடத்துக்கு சிறப்பு கலந்தாய்வு: சுப்ரீம்கோர்ட்