in

OMGOMG

471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது ஜாமீன்

சென்னை:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு புழல் சிறையில்  அவர் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது.

ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 471 நாட்கள் சிறை வாசத்தில் இருந்து செந்தில் பாலாஜி வெளியுலகத்தை காணவிருக்கிறார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அராஜகம் செய்யும் மருத்துவமனைகள்; ஆபத்தில் பொதுமக்கள்

மீண்டும் அமைச்சராகிறாரா செந்தில் பாலாஜி?