சென்னை:
சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்துவைத்து விற்பனை செய்த மெடிக்கல் ஷாப்பிற்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரத்தில் வைப் வேக்சின் என்கிற பெயரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். இங்கு மொத்தமாகவும், சில்லரை விற்பனையும் மருந்து விற்பனை செய்து வந்தார்.
இங்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 50க்கும மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பாட்டில்களை திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிமுதல் மெடிக்கல் ஷாப்பிற்கு சீல் வைத்தனர்.
மேலும் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கிறது? இதனை எப்படி இவர் பதப்படுத்தி விற்பனை செய்கிறார் என்பது குறித்து மெடிக்கல் ஷாப் உரிமையாளர் முத்தையாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings