நீலகிரி மாவட்டம்.
குன்னூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரீத் பாரத் திட்டத்தில்,மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனை சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் பன்னாலால் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்திற்கு சிறப்பு மலை இரயில் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் குன்னூர் வந்தார் குன்னூர் இரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்தார். புதிய கட்டுமான பணிகள் மற்றும் தற்போதைய நிலையில்,டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதி,டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திர செயல்பாடுகள், பயணிகள் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, பயணிகளுக்கான அறை மற்றும் வசதியுடன் கூடிய காத்திருக்கும் அறையை ஆய்வு செய்தார்.அப்போது மாநில அரசுடன் இணைந்து குன்னூரில் இரயில்வே மேம்பாலம் கட்டவும்,
கொரனாவிற்கு முன்பு உள்ளூர் வாசிகளுக்கு மாத கட்டணத்தில் இரயில்வே பாஸ் வழங்கப்பட்டதை ரத்து செய்யப்பட்டு இருந்தது நிலையில் அதனை மீண்டும் புதுப்பித்து தரவேண்டும் என்றும் மலை இரயிலில் பயணம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பயண்படுத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
இதனால் யானை உட்பட்ட பல வன விலங்குகள் பாதிக்கப்படுவதாக மேலாளரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings