in

ராஜராஜன் கால ஈழக் காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவிகள்

ராமநாதபுரம்

ராஜராஜன் காலத்து ஈழக் காசுகளை பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்புல்லாணியைச் சேர்ந்த க. மணிமேகலை, சோ. திவ்யதர்ஷினி, செ. கனிஷ்காஸ்ரீ ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள் விடுமுறையில் வீட்டின் முன் மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு பழமையான காசு கிடைத்ததாக மன்றச் செயலர் ராஜகுருவிடம் கொடுத்தனர். காசையும் அது கிடைத்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்தனர். இது முதலாம் ராஜராஜசோழன் (கி. பி. 985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசுகள் என்பது தெரியவந்தது.‘

இதையடுத்து அந்த 3 பள்ளி மாணவிகளையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராமநாதபுரத்தில் 50 கிலோ கடல் அட்டைகள் கடத்திய 5 பேர் கைது

முடிவுக்கு வராத கள்ளச்சாராயம்: வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது