திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் நவீன் ராஜ் (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அல்லிமுத்துக்கு சொந்தமான மாடு மேய்ச்சலுக்குச் சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.
எனவே, நவீன் ராஜூம் அவரது நண்பர் கோபி (14) என்பவரும் மாட்டைத் தேடிச் சென்றனர். அப்போது நெற்குணம் பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவருடைய நிலத்தில் இறங்கிய போது மின்வேலியில் சிக்கி நவீன்ராஜ், கோபி ஆகிய இருவரும் சிக்கித் தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
in பொது
மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலி

GIPHY App Key not set. Please check settings