கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி. முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் பள்ளியின் மாணவிகள் கலந்துகொண்டனர். இரவில் பள்ளி வளாகத்திலேயே தங்கி முகாமில் பங்கேற்று வந்தனர்.
இதில் என்.சி.சி. முகாமிற்கு சென்ற 13 வயது மாணவி கடந்த 8ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிகாலை மணி அளவில் என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சிவராமன் (வயது 30) என்பவர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பள்ளியின் முதல்வரிடம் இதுபற்றி மாணவி தெரிவித்தபோது, இதனை யாரிடமும் கூறி பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மாணவிக்கு திடீரென உடல்நலக்ககுறைவு ஏற்பட்டது. இதனை தனது தாயிடம் நடந்த வற்றை கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை நடத்தி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி பள்ளி முதல்வர் மற்றும் முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர் உள்பட பள்ளியில் பணிபுரியும் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சிவராமன், சுதாகர் ஆகிய 2 பேரை தேடி வந்தநிலையில் முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போட்டனர்.
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், 13 மாணவிகளுக்கு இதுபோல் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings