தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளுக்கு வீர வணக்கம் தமிழக மக்கள் நல இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக கீழ அரசடி அய்யனார் புறத்தில் நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் காந்தி மள்ளர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அரி ராமன் முன்னிலை வைத்தார். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
1.தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகங்களுக்கான வீர வணக்க நாளை முன்னிட்டு அரசு ஒரு நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
2.துப்பாக்கிச் சூட்டில் இறந்த 15 தியாகிகளுக்கும் தூத்துக்குடியில் நினைவகம் அமைக்க வேண்டும்.
3.ஸ்டெர்லைட் ஆலையை இந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும்.
4.ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்திய இடத்தை அந்த மக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
5.துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு ரூ.2 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.
6.நீதி அரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 அதிகாரிகள் மீதும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த் மற்றும் அமைப்பினுடைய முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். மாநில இளைஞரணி பொறுப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings