விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணப் பரிமாற்றம் அதிகளவு நடைபெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. முகூர்த்த நாளான நேற்று காலை முதல் பத்திரப்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் 2 ஜீப்புகளில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக ஊழியர்களை மட்டும் உள்ளே வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.2,14,120 ரொக்க பணம் சிக்கியுள்ளது.
GIPHY App Key not set. Please check settings