in

போலி ஆவணம், போலி நபர் மூலம் ரூ.1 கோடி மனை விற்பனை: பெண் கைது

ஆவடி:

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோடு மானசரோவர் சிரஸ்ட் பகுதியை சேர்ந்த அப்பாவு மனைவி ஷீலா (வயது 60) என்பவர்  நிலப் பிரச்சனை தீர்வு பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், தானும் தனது சகோதரரான கேரளாவில் வசித்து வரும் ஏவி பிலிப் ஜோசப் என்பவருடன் சேர்ந்து  1999ம் வருடம் அம்பத்தூர் பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகர் பகுதியில் 5580 சதுர அடி கொண்ட இடத்தை இரண்டாக பிரித்து இருவருக்கும் 2790 சதுர அடி வீதம் கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்தது.

ஏவி பிலிப் ஜோசப், கடந்த 2022ம் ஆண்டு தனக்கு சொந்தமான 2790 சதுர அடி இடத்தை நில புரோக்கர் மூலமாக கோவிந்தராஜ் என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். அதன் அருகே உள்ள ஷீலாவின் இடத்தையும் கோவிந்தராஜுக்கு  நில புரோக்கர் மூலம் போலியான ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருந்தது.

22.3.24ஆம் தேதி அவ்வழியாக சென்ற ஷீலாவின் தோழி ஷீலாவிற்கு சொந்தமான இடத்தில் அடையாளம் தெரியாத யாரோ காம்பவுண்ட் சுவர் கட்டி வருவதை பார்த்து ஷீலாவிடம் கூறினார். சந்தேகம் அடைந்த ஷீலா அந்த இடத்திற்கு ஈசி போட்டு பார்த்ததில் போலியான ஆவணம் மூலம் விற்பனை செய்து உள்ளது தெரியவந்தது.

ஷீலாவைப் போன்று போலியான நபர் லீலாவதி என்பவரைக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து கொன்னூர் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கோவிந்தராஜ் என்பவனுக்கு பத்திரப்பதிவு செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை ஏமாற்றி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்த புகாரின் மீது நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து உள்ளார். ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தலைமறைவாக இருந்த சென்னை கொடுங்கையூர் காந்திநகர் 4வது தெருவை சேர்ந்த லீலாவதி (வயது 54) என்கின்ற பெண் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இனியாவது அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு நிதானத்துடன் நடக்க வேண்டும்

ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் “சமூகநீதி நாள் உறுதிமொழி” ஏற்பு