ஆவடி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே வாழ்ந்தவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் என்று நரிக்குறவர் இன மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அவரது சமாதியில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர் இன மக்கள் சங்கத் தலைவி தனலட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் ஒன்றாக மாலை காசி மணி, பாசி மணி உள்ளிட்ட மாலைகளுடன் ஜெய் பீம்… ஜெய் பீம் …என்று கோஷங்களுடன் அவரது சமாதியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் அவர்கள் கூறுகையில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்த போது அவர் நரிக்குறவர் இன மக்களுக்கு அயராது பாடுபட்டவர். எங்கள் குடும்ப விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் அவர் ஓடோடி வந்து உதவி செய்வார்.

எங்களுக்கு மட்டுமல்ல ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து ஒரு ஆத்மா இன்று நம்மை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் சங்க பொறுப்பாளர்கள் சாந்தி. குட்டி பையா மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings